Saturday, 13 August 2011

மூன்று சிக்சர்கள் விளாசிய பிரவீன் குமார்

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாமில் நடக்கும் 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தபோது  8வது விக்கெட்டிற்கு இந்திய அணி கேப்டன் தோனியுடன் பிரவீண் குமார் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிதானமாக விளையாட மறுமுனையில் பிரவீண் குமார் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். பிரவீண் குமார் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்தியா 205 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீண் குமார் அவுட்டானார். இதனையடுத்து குறைந்த பந்தில் அரைசதமடிக்கும் சாதனை நிகழ்த்துவதை தவற விட்டார். 8 வது விக்கெட்டிற்கு தோனி பிரவீண் குமார் ஜோடி 45 பந்துகளில் 75 ரன்கள் குவித்தது. அவர் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார். 

No comments:

Post a Comment