Sunday, 29 May 2011

ஒபாமாவின் மிகப்பெரிய ஊழல் விரைவில் வரும்?

லண்டன் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அரசின் முதல் மிகப் பெரிய ஊழல் விரைவில் வெளிப்படப் போவதாக, அரசியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அந்தத் தேர்தலுக்கு முன், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்று வெளியுலகுக்கு தெரிய வரும் என்று பிரண்டன் நைஹான் என்பவர் தெரிவித்துள்ளார்.பிரண்டன் நைஹான், அமெரிக்காவில் அரசியல் நிபுணராகவும், ஊடக விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார்.இவர், 1977 முதல் 2008 வரையிலான அமெரிக்க அதிபர்களின் ஊழல்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மிச்சிகன் பல்கலையில் இப்பணியை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் மற்றும் ஊடகத் துணையுடன், அதிகார வர்க்கத்தின் மேல் மட்டத்தில் நிகழும் தவறான நடவடிக்கைகள் தான் ஊழல். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஒபாமாவின் ஊழல், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் வெளியுலகுக்கு தெரிய வரும். அமெரிக்காவின் மிகச் சில அதிபர்கள் தாங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக, ஊழலைத் தவிர்த்தனர். இதை அதிபர்கள் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் நான் கண்டறிந்தேன். அவ்வகையில் ஒபாமா மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்.ஒபாமா நிர்வாகத்துக்கு ஆதரவாக இல்லாத ரிபப்ளிகன் கட்சியின் ஒரு சிலரின் ஆதரவுடன், நான் எனது ஆய்வை முடித்துள்ளேன். தங்கள் ஆட்சியில் முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்த ரொனால்ட் ரீகன் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரைப் போல, ஒபாமாவும் வீழ்ச்சியடைவார்.இவ்வாறு பிரண்டன் நைஹான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment