போர்ட் ஆப் ஸ்பெயின்: ரோகித் சர்மா, ரெய்னா கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
அஷ்வின் இல்லை: இந்திய அணியில் "ஆப்-ஸ்பின்னர் அஷ்வினுக்கு பதிலாக "லெக்-ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் "அதிரடி போலார்டு, "ஆல்-ரவுண்டர் ஆன்ட்ரி ரசல் இடம் பெறாதது ஆச்சரியம் அளித்தது. "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
மந்தமான துவக்கம்: இந்திய "வேகங்கள் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். லெண்டில் சிம்மன்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்ந்து படுமந்தமான துவக்கம் தந்தனர். பிரவீண் குமார் வேகத்தில் சிம்மன்ஸ்(6) வெளியேறினார். அடுத்து வந்த டேரன் பிராவோ(4), முனாப் பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த எட்வர்ட்ஸ்(21), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். பின் அனுபவ வீரர்களான சர்வான், மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். யூசுப் பதான் ஓவரில் சாமுவேல்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் முனாப் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த சர்வான், அதற்கு அடுத்த பந்தில் 56 ரன்களுக்கு அவுட்டானார். அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 42வது ஓவரில் டுவைன் பிராவோ, சாமுவேல்ஸ் தலா ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஒரு நாள் அரங்கில் தனது 19வது அரைசதம் கடந்த சாமுவேல்ஸ்(55), ரெய்னா பந்துவீச்சில் போல்டானார். பின் சுழலில் கலக்கினார் ஹர்பஜன். இவரது வலையில் முதலில் டுவைன் பிராவோ(22) சிக்கினார். அடுத்து கார்ல்டன் பாக்(16) அவுட்டானார். கேப்டன் டேரன் சமி(4) ஏமாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
திணறல் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. பார்த்திவ் படேல்(13) வீணாக ரன் அவுட்டானார். ராம்பால் வேகத்தில் விராத் கோஹ்லி(2) வெளியேறினார். பிஷூ சுழலில் பத்ரிநாத்(17) நடையை கட்டினார்.
தவான், சர்மா அரைசதம்: தொடர்ந்து விளையாடிய சிகர் தவான் 51, ரெய்னா 43 ரன்களை எடுத்தனர். ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், 44.5 ஓவரில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா பெற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
அஷ்வின் இல்லை: இந்திய அணியில் "ஆப்-ஸ்பின்னர் அஷ்வினுக்கு பதிலாக "லெக்-ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் "அதிரடி போலார்டு, "ஆல்-ரவுண்டர் ஆன்ட்ரி ரசல் இடம் பெறாதது ஆச்சரியம் அளித்தது. "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
மந்தமான துவக்கம்: இந்திய "வேகங்கள் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். லெண்டில் சிம்மன்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்ந்து படுமந்தமான துவக்கம் தந்தனர். பிரவீண் குமார் வேகத்தில் சிம்மன்ஸ்(6) வெளியேறினார். அடுத்து வந்த டேரன் பிராவோ(4), முனாப் பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த எட்வர்ட்ஸ்(21), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். பின் அனுபவ வீரர்களான சர்வான், மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். யூசுப் பதான் ஓவரில் சாமுவேல்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் முனாப் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த சர்வான், அதற்கு அடுத்த பந்தில் 56 ரன்களுக்கு அவுட்டானார். அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 42வது ஓவரில் டுவைன் பிராவோ, சாமுவேல்ஸ் தலா ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஒரு நாள் அரங்கில் தனது 19வது அரைசதம் கடந்த சாமுவேல்ஸ்(55), ரெய்னா பந்துவீச்சில் போல்டானார். பின் சுழலில் கலக்கினார் ஹர்பஜன். இவரது வலையில் முதலில் டுவைன் பிராவோ(22) சிக்கினார். அடுத்து கார்ல்டன் பாக்(16) அவுட்டானார். கேப்டன் டேரன் சமி(4) ஏமாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
திணறல் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. பார்த்திவ் படேல்(13) வீணாக ரன் அவுட்டானார். ராம்பால் வேகத்தில் விராத் கோஹ்லி(2) வெளியேறினார். பிஷூ சுழலில் பத்ரிநாத்(17) நடையை கட்டினார்.
தவான், சர்மா அரைசதம்: தொடர்ந்து விளையாடிய சிகர் தவான் 51, ரெய்னா 43 ரன்களை எடுத்தனர். ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், 44.5 ஓவரில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா பெற்றார்.

No comments:
Post a Comment