மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான "டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. பயிற்சி போட்டிகளில் அசத்திய இந்திய அணியின் இளம் வீரர்கள், இதில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி இன்று மான்செஸ்டர், ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இந்திய அணி, சமீபத்தில் நடந்த மூன்று பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக நம்பிக்கையுடன் உள்ளது. துவக்க வீரர் பார்த்திவ் படேல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இன்று சச்சினுடன் இணைந்து களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த மூன்று பயிற்சி போட்டியிலும் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா நம்பிக்கையுடன் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இதனால், இன்றும் அசத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
"மிடில் ஆர்டரில்' டிராவிட் வழக்கம் போல, "நங்கூர' ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பின்வரிசையில் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். இவர்கள் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது.
வினய் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிரவீண் குமார் நம்பிக்கை தருகின்றார். இவருடன் வினய் குமாரும் இணைந்து தாக்குதல் தொடுத்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் தரலாம். சுழலில் அஷ்வின், அமித் மிஸ்ரா என இருவரும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இதனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் இடம்பெறுவது கடினமே.
பிராட் கேப்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. "ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பிராட், "டுவென்டி-20' அணியின் கேப்டனாக <உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கீஸ்வெட்டருடன், அறிமுக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' பீட்டர்சன், மார்கன், ரவி போபரா, சமித் படேல், ஜாஸ் பட்லர், பென் ஸ்டிரோக்ஸ் ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
பவுலிங்கில் ஸ்டூவர்ட் பிராட்டுடன், பிரஸ்னன், டெர்ன்பக், ஸ்டீவன் பின் கைகொடுக்க காத்திருக்கின்றனர். சுழலில் சுவான் தொல்லை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பதிலடி கொடுக்குமா?
தற்போதைய "டுவென்டி-20' உலக சாம்பியன் இங்கிலாந்து அணி, சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் தோற்றுள்ளது. இதனால் இன்று உலக சாம்பியன் அந்தஸ்துக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கலாம். அதேநேரம் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இன்றைய போட்டியில் அதிக விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி இன்று மான்செஸ்டர், ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இந்திய அணி, சமீபத்தில் நடந்த மூன்று பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக நம்பிக்கையுடன் உள்ளது. துவக்க வீரர் பார்த்திவ் படேல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இன்று சச்சினுடன் இணைந்து களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த மூன்று பயிற்சி போட்டியிலும் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா நம்பிக்கையுடன் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இதனால், இன்றும் அசத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
"மிடில் ஆர்டரில்' டிராவிட் வழக்கம் போல, "நங்கூர' ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பின்வரிசையில் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். இவர்கள் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது.
வினய் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிரவீண் குமார் நம்பிக்கை தருகின்றார். இவருடன் வினய் குமாரும் இணைந்து தாக்குதல் தொடுத்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் தரலாம். சுழலில் அஷ்வின், அமித் மிஸ்ரா என இருவரும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இதனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் இடம்பெறுவது கடினமே.
பிராட் கேப்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. "ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பிராட், "டுவென்டி-20' அணியின் கேப்டனாக <உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கீஸ்வெட்டருடன், அறிமுக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' பீட்டர்சன், மார்கன், ரவி போபரா, சமித் படேல், ஜாஸ் பட்லர், பென் ஸ்டிரோக்ஸ் ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
பவுலிங்கில் ஸ்டூவர்ட் பிராட்டுடன், பிரஸ்னன், டெர்ன்பக், ஸ்டீவன் பின் கைகொடுக்க காத்திருக்கின்றனர். சுழலில் சுவான் தொல்லை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பதிலடி கொடுக்குமா?
தற்போதைய "டுவென்டி-20' உலக சாம்பியன் இங்கிலாந்து அணி, சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் தோற்றுள்ளது. இதனால் இன்று உலக சாம்பியன் அந்தஸ்துக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கலாம். அதேநேரம் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இன்றைய போட்டியில் அதிக விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment