Friday, 12 August 2011

திருச்சியில் லேசான நில அதிர்ச்சி- மக்கள் பீதி

திருச்சி: திருச்சியில் இன்று முற்பகலில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி நகரின் சில பகுதிகளிலும் சிறுகனூர் என்ற இடத்திலும் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். முற்பகல் 11.20 மணியளவில் இது ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் லேசாக ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர்.

No comments:

Post a Comment