சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துார்விட்டதையடுத்து அவரை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.
காலை 8.20 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார். திகார் சிறைக்குச் சென்று கனிமொழியை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக கனிமொழியின் ஜாமீன் தள்ளுபடியானவுடன் மூத்த திமுக தலைவர்களுடன் சென்னையில் தனது இல்லத்தில் கருணாநிதி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இன்று கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, தலைமை நிலையச் செயலாளர் காஜாமொகைதீன், கருணாநிதியின் டாக்டர் பிரவீன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் அவர் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் கருணாநிதி சந்தித்துப் பேசக் கூடும் என்று தெரிகிறது.
2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். அதன் பின்னரே கனிமொழி மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 8.20 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார். திகார் சிறைக்குச் சென்று கனிமொழியை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக கனிமொழியின் ஜாமீன் தள்ளுபடியானவுடன் மூத்த திமுக தலைவர்களுடன் சென்னையில் தனது இல்லத்தில் கருணாநிதி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இன்று கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, தலைமை நிலையச் செயலாளர் காஜாமொகைதீன், கருணாநிதியின் டாக்டர் பிரவீன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் அவர் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் கருணாநிதி சந்தித்துப் பேசக் கூடும் என்று தெரிகிறது.
2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். அதன் பின்னரே கனிமொழி மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment